என் மலர்
செய்திகள்

கைது
சீர்காழியில் அடகு கடை உரிமையாளரை அரிவாளை காட்டி மிரட்டியவர் கைது
சீர்காழியில் அடகு கடை உரிமையாளரை அரிவாளை காட்டி மிரட்டியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி ஈசானிய தெருவில் ராஜேந்திரன் (வயது 55). இவர், அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு நேற்று மதியம் குடிபோதையில் வந்த அதே பகுதியை சேர்ந்த கந்தசாமி (40) என்பவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு அடகு வைத்த 5 பவுன் நகையை திரும்ப கேட்டுள்ளார். அதற்கு கடை உரிமையாளர் அந்த நகை மூழ்கி விட்டதாக தெரிவித்தார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கந்தசாமி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை காட்டி ராஜேந்திரனை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் கந்தசாமியை பிடித்து சீர்காழி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கந்தசாமியை கைது செய்தனர்.
Next Story






