search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா
    X
    நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா

    சிறுபான்மையின மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்

    மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற சிறுபான்மையின மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்து உள்ளார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்ட இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தை சார்ந்தவர்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெறலாம். அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களில் 2020-21-ம் கல்வி ஆண்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயில்பவர்கள் பள்ளி படிப்பு உதவித்தொகை, 11-ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயில்பவர்கள் மேற்படிப்பு கல்வி உதவித்தொகை, தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி பயில்பவர்கள் தகுதி, வருவாய் அடிப்படையில் கல்வி உதவித்தொகை பெறலாம். இதற்கு www.scholarships.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு வருகிற 31-ந் தேதி கடைசி நாள் ஆகும்.

    2020-21-ம் கல்வி ஆண்டில் தமிழ்நாட்டில் மேற்கண்ட கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் 1 லட்சத்து 35 ஆயிரத்து 127 மாணவ-மாணவிகள் பயன் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த கல்வி உதவித்தொகை மாணவ-மாணவிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

    புதிதாக விண்ணப்பிக்கும் மாணவ-மாணவிகள் இணையதளத்தில் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் அனைத்து கல்வி நிலையங்களும் தங்களுடைய குறியீட்டு எண்ணை மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இத்திட்டங்கள் தொடர்பான மத்திய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள் http://www.minorityaffairs.gov.in/schemes என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. கூடுதல் விவரங்களுக்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    Next Story
    ×