search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பறிமுதல் செய்யப்பட்ட மஞ்சள் மூட்டைகள்
    X
    பறிமுதல் செய்யப்பட்ட மஞ்சள் மூட்டைகள்

    இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த மஞ்சள் மூட்டைகள் பறிமுதல்

    வேதாரண்யம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள மஞ்சள் மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் வீட்டின் உரிமையாளரை கைது செய்தனர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஒரு வீட்டில் இலங்கைக்கு கடத்துவதற்காக மஞ்சள் மூட்டைகள் பதுக்கி வைத்து இருப்பதாக கடலோர காவல் குழும போலீஸ் துணை சூப்பிரண்டு குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் செல்வராசு மற்றும் போலீசார், வேதாரண்யத்தை அடுத்த பெரியகுத்தகை கிராமத்தில் ஒரு வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அங்கு சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய விராலி மஞ்சள் 25 கிலோ எடை கொண்ட 80 மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அங்கிருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள மஞ்சள் மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மஞ்சள் மூட்டைகளை பதுக்கி வைத்திருந்த வீட்டின் உரிமையாளர் முனீஸ்வரன்(வயது 38) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
    Next Story
    ×