search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாயம்
    X
    மாயம்

    பாகூர் அருகே கல்லூரி மாணவி மாயம்

    பாகூர் அருகே கோவிலுக்கு சென்ற கல்லூரி மாணவி வீடு திரும்பாதது குறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பாகூர்:

    பாகூரை அடுத்த நிர்ணயப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 48), விவசாயி. இவரது மகள் அகிலா (18). காரைக்கால் வேளாண் கல்லூரியில் படித்து வந்தார். தற்போது வீட்டில் இருந்தபடி ஆன்லைன் மூலம் படித்தார். 

    கடந்த 16-ந் தேதி காலை கோவிலுக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற அகிலா மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை.

    இது குறித்த புகாரின்பேரில் பாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×