என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சித்தோடு பகுதியில் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது 25 பவுன் நகை மீட்பு மோட்டார்சைக்கிள் பறிமுதல்
Byமாலை மலர்19 Oct 2020 10:40 AM GMT (Updated: 19 Oct 2020 10:40 AM GMT)
சித்தோடு பகுதியில் திருட்டில் ஈடுபட்டதாக வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த வாலிபரிடம் இருந்து 25 பவுன் நகையை போலீசார் மீட்டதுடன், திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார்சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
பவானி:
பவானியை அடுத்த சித்தோடு நால்ரோடு பகுதியில் சித்தோடு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும் வகையில் ஒருவர் மோட்டார்சைக்கிளில் சுற்றி திரிந்து கொண்டிருந்தார். உடனே போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், ‘அவர் மதுரை ஆலப்பாளையம் செக்கடி தெருவை சேர்ந்த சோனையன் என்பவரின் மகன் சுரேஷ் என்கிற பட்டறை சுரேஷ் (வயது 31) என்பதும், அவர் சித்தோடு பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும்,’ தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சுரேசை போலீசார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 25 பவுன் நகையை போலீசார் மீட்டனர். மேலும் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார்சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X