என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருநின்றவூர் பகுதியில் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது
Byமாலை மலர்18 Oct 2020 8:21 AM GMT (Updated: 18 Oct 2020 8:21 AM GMT)
திருநின்றவூர் பகுதியில் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவடி:
திருநின்றவூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ச்சியாக வழிப்பறி கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தன. இதையடுத்து அம்பத்தூர் காவல் மாவட்ட போலீஸ் துணை கமிஷனர் தீபா சத்யன் உத்தரவின் பேரில், உதவி கமிஷனர் வெங்கடேசன் தலைமையில் திருநின்றவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை திருநின்றவூர் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை மடக்கி பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், சென்னை பெரம்பூரை சேர்ந்த மணிகண்டன் (வயது 22) மற்றும் லாரன்ஸ் (21) ஆகிய இருவரும் திருநின்றவூர், முத்தாபுதுபேட்டை அதை சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு இடங்களில் வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், 15 பவுன் நகைகள், 2 மொபட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X