என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ கிலோ ரூ.1,400-க்கு விற்பனை
Byமாலை மலர்17 Oct 2020 10:28 AM GMT (Updated: 17 Oct 2020 10:28 AM GMT)
சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகை பூ கிலோ ரூ.1,400-க்கு விற்பனை ஆனது.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு தினமும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 40 கிராமங்களில் இருந்து விவசாயிகள் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தார்கள்.
நேற்று நடந்த ஏலத்தில் ஒரு கிலோ மல்லிகை பூ 1,400-க்கும், முல்லை ரூ.480-க்கும், காக்கடா ரூ.550-க்கும், செண்டுமல்லி ரூ.37-க்கும், பட்டுப் பூ ரூ.80-க்கும், ஜாதிமல்லி ரூ.600-க்கும், கனகாம்பரம் ரூ.850-க்கும், சம்பங்கி ரூ.60-க்கும் விற்பனை ஆனது. இதேபோல் நேற்று முன்தினம் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1,260-க்கும், முல்லை ரூ.540-க்கும், காக்கடா ரூ.600-க்கும், செண்டுமல்லி ரூ.25-க்கும், பட்டுப்பூ ரூ.97-க்கும், ஜாதி மல்லி ரூ.600-க்கும், கனகாம்பரம் ரூ.530-க்கும், சம்பங்கி ரூ.90-க்கும் ஏலம் போனது.
நேற்று முன்தினத்தை விட நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.140-ம், கனகாம்பரம் ரூ.320-ம், செண்டுமல்லி ரூ.12-ம் அதிகரித்து விற்பனை ஆனது. அதேபோல் ஒரு கிலோ முல்லை பூ ரூ.60-ம், காக்கடா ரூ.50-ம், பட்டுப்பூ ரூ.17-ம், சம்பங்கி ரூ.30-ம் குறைந்து ஏலம் போனது. கனகாம்பரம் அதிக விலைக்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
வரத்து குறைந்ததால் கனகாம்பரம், மல்லிகை ஆகிய பூக்களின் விலைகள் அதிகரித்தது என்று மலர் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு தினமும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 40 கிராமங்களில் இருந்து விவசாயிகள் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தார்கள்.
நேற்று நடந்த ஏலத்தில் ஒரு கிலோ மல்லிகை பூ 1,400-க்கும், முல்லை ரூ.480-க்கும், காக்கடா ரூ.550-க்கும், செண்டுமல்லி ரூ.37-க்கும், பட்டுப் பூ ரூ.80-க்கும், ஜாதிமல்லி ரூ.600-க்கும், கனகாம்பரம் ரூ.850-க்கும், சம்பங்கி ரூ.60-க்கும் விற்பனை ஆனது. இதேபோல் நேற்று முன்தினம் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1,260-க்கும், முல்லை ரூ.540-க்கும், காக்கடா ரூ.600-க்கும், செண்டுமல்லி ரூ.25-க்கும், பட்டுப்பூ ரூ.97-க்கும், ஜாதி மல்லி ரூ.600-க்கும், கனகாம்பரம் ரூ.530-க்கும், சம்பங்கி ரூ.90-க்கும் ஏலம் போனது.
நேற்று முன்தினத்தை விட நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.140-ம், கனகாம்பரம் ரூ.320-ம், செண்டுமல்லி ரூ.12-ம் அதிகரித்து விற்பனை ஆனது. அதேபோல் ஒரு கிலோ முல்லை பூ ரூ.60-ம், காக்கடா ரூ.50-ம், பட்டுப்பூ ரூ.17-ம், சம்பங்கி ரூ.30-ம் குறைந்து ஏலம் போனது. கனகாம்பரம் அதிக விலைக்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
வரத்து குறைந்ததால் கனகாம்பரம், மல்லிகை ஆகிய பூக்களின் விலைகள் அதிகரித்தது என்று மலர் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X