என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டாஸ்மாக் ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது
Byமாலை மலர்17 Oct 2020 8:37 AM GMT (Updated: 17 Oct 2020 8:37 AM GMT)
டாஸ்மாக் ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்கல்:
கீழ்வேளூர்-மூங்கில்குடி சாலை வடக்குவெளி பகுதியில் டாஸ்மாக்கடை உள்ளது. இந்த கடையில் சங்கர் (வயது48) மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு கீழ்வேளூர் நேருநகரை சேர்ந்த விக்னேஷ் (25), அதே பகுதியை சேர்ந்த எழிலரசன் (31) ஆகியோர் டாஸ்மாக் கடையில் மதுகுடித்து விட்டு விற்பனையாளர் லட்சுமணனிடம் தகராறு செய்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து டாஸ்மாக் மேற்பார்வையாளர் சங்கர் கீழ்வேளூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் கீழ்வேளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ், எழிலரசன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X