search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஸ்ரீபெரும்புதூர் அருகே கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபர் கைது

    ஸ்ரீபெரும்புதூர் அருகே கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஏராளமான கல்லுரிகள், தொழிற்சாலைகள் உள்ளன. ஸ்ரீபெரும்புதூரை அடுத்த தண்டலம் பகுதியில் தனியார் ஆஸ்பத்திரி மற்றும் மருத்துவ கல்லூரி உள்ளது. அதன் அருகே தனியார் அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. இங்கு கல்லூரி மாணவர்கள் வடமாநில தொழிலாளர்கள் தங்கி உள்ளனர். இந்த பகுதியில் கல்லூரி மாணவர்கள், வடமாநில தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்கப்படுவதாக ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் வந்தது.

    தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் மற்றும் போலீசார் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த தண்டலம் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது மருத்துவ கல்லூரி அருகே கால்வாயில் ஒரு மர்ம நபர் சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்தார். போலீசாரை கண்டதும் அவர் தப்பி ஓட முயன்றார். அவரை போலீசார் விரட்டி பிடித்தனர்.

    போலீசார் அந்த வாலிபரை சோதனை செய்ததில் அவர் திருவள்ளூர் மாவட்டம் குத்தம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஸ்டீபன்ராஜ் (வயது31) என்பதும் அவரிடம் கஞ்சா இருப்பதும் அவர் கல்லூரி மாணவர்களுக்கும், வடமாநில தொழிலாளர்களுக்கும் கஞ்சா விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 1½ கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர்.
    Next Story
    ×