search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 6 பேர் கைது

    தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    வேப்பனப்பள்ளி போலீசார், தடதாரை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்ற அத்திகுண்டா சண்முகராவ் (வயது 46) என்பவரை கைது செய்தனர். ஓசூர் டவுன் போலீசார் சானசந்திரம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்ற ரவிக்குமார்(25) என்பவரை கைது செய்தனர்.

    தளி போலீசார் உப்பாரப்பள்ளி பகுதியில் உள்ள மளிகை கடையினை சோதனை செய்தனர். அதில் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்த சீனிவாசன் (44) என்பவரை கைது செய்தனர். இதே போல உப்பாரப்பள்ளியில் உள்ள ஒரு மளிகை கடையில் சோதனை செய்து, அங்கிருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, சீனிவாசன்(50) என்பவரை கைது செய்தனர்.

    கல்லாவி போலீசார் ஓலப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்ற மகாலிங்கம் (54) என்பவரை கைது செய்தனர். இதேபோல், சாமல்பட்டி போலீசார் குன்னத்தூர் சாலையில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பெட்டிக்கடையினை சோதனை செய்தனர். அங்கு புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, கடையின் உரிமையாளரான முருகன் (55) என்பவரை கைது செய்தனர்.
    Next Story
    ×