என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மகள் இறந்த துக்கத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை
Byமாலை மலர்15 Oct 2020 6:31 AM GMT (Updated: 15 Oct 2020 6:31 AM GMT)
அரியலூர் அருகே மகள் இறந்த துக்கத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் சம்பத். இவருடைய மனைவி ஜெயந்தி(வயது 45), மகள் சக்தி ரூபா. இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு குடும்ப தகராறு காரணமாக தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் மகள் இறந்த துக்கத்தில் இருந்து மீள முடியாமல் ஜெயந்தி மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மகள் தீ வைத்து கொண்ட அதே இடத்தில், ஜெயந்தியும் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கீழப்பழுவூர் போலீசார், ஜெயந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் சம்பத். இவருடைய மனைவி ஜெயந்தி(வயது 45), மகள் சக்தி ரூபா. இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு குடும்ப தகராறு காரணமாக தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் மகள் இறந்த துக்கத்தில் இருந்து மீள முடியாமல் ஜெயந்தி மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மகள் தீ வைத்து கொண்ட அதே இடத்தில், ஜெயந்தியும் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கீழப்பழுவூர் போலீசார், ஜெயந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X