என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொத்தடிமைகளாக பணியமர்த்தப்பட்ட 4 சிறுவர்கள் மீட்பு
Byமாலை மலர்14 Oct 2020 10:11 AM GMT (Updated: 14 Oct 2020 10:11 AM GMT)
திருவாரூரில் கொத்தடிமைகளாக பணியமர்த்தப்பட்ட 4 சிறுவர்களை சைல்டுலைன் அதிகாரிகள் மீட்டனர்.
திருவாரூர்:
திருவாரூர் நகர் தர்மகோவில் தெருவில் இறைச்சி கடை உள்ளது. இந்த கடையில் சிறுவர்கள் கொத்தடிமைகளாக பணி புரிந்து வருவதாக சைல்டுலைன் 1098-க்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் திருவாரூர் சைல்டுலைன் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகலாதன், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் பாஸ்கரன், குழந்தை பாதுகாப்பு துறை புறதொடர்பு பணியாளர் சாந்தி மற்றும் டவுன் போலீசார் கொண்ட குழுவினர் இறைச்சி கடையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதியை சேர்ந்த 4 சிறுவர்களை சட்டவிரோதமாக பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து கடையின் உரிமையாளர் அன்புவிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்லடம் புரோக்கர் மணி என்பவர் 4 சிறுவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.20 ஆயிரம் பெற்று கொண்டு வேலைக்கு விட்டு சென்றது தெரியவந்தது. மீட்கப்பட்ட 4 சிறுவர்களும் கொரோனா பரிசோதனைக்கு பிறகு இன்று போலீஸ் பாதுகாப்புடன் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருவாரூர் நகர் தர்மகோவில் தெருவில் இறைச்சி கடை உள்ளது. இந்த கடையில் சிறுவர்கள் கொத்தடிமைகளாக பணி புரிந்து வருவதாக சைல்டுலைன் 1098-க்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் திருவாரூர் சைல்டுலைன் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகலாதன், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் பாஸ்கரன், குழந்தை பாதுகாப்பு துறை புறதொடர்பு பணியாளர் சாந்தி மற்றும் டவுன் போலீசார் கொண்ட குழுவினர் இறைச்சி கடையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதியை சேர்ந்த 4 சிறுவர்களை சட்டவிரோதமாக பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து கடையின் உரிமையாளர் அன்புவிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்லடம் புரோக்கர் மணி என்பவர் 4 சிறுவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.20 ஆயிரம் பெற்று கொண்டு வேலைக்கு விட்டு சென்றது தெரியவந்தது. மீட்கப்பட்ட 4 சிறுவர்களும் கொரோனா பரிசோதனைக்கு பிறகு இன்று போலீஸ் பாதுகாப்புடன் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X