என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கள்ளக்குறிச்சி அருகே பள்ளி மாணவியை கடத்தி திருமணம்- வாலிபர் கைது
Byமாலை மலர்14 Oct 2020 8:46 AM GMT (Updated: 14 Oct 2020 8:46 AM GMT)
கள்ளக்குறிச்சி அருகே ஆசை வார்த்தை கூறி பள்ளி மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே க.மாமனந்தல் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். கடந்த 9-ந் தேதி வெளியே சென்ற மாணவி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அவரது பெற்றோர்கள் எங்கு தேடியும் கிடைக்க வில்லை. பின்னர் இது குறித்து மாணவியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர்.
இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை அருகே புகைப்பட்டியை சேர்ந்த செல்வராஜ் மகன் முத்து (வயது 27) என்பவர் மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று பெங்களூரில் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து முத்துவை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X