search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    ஊத்தங்கரை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்- பால் பண்ணை ஊழியர் பலி

    ஊத்தங்கரை அருகே விபத்தில் பால் பண்ணை ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பொம்மிடி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள ஜடகானூர் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகன் வெங்கடேசன் (வயது 38). இவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் பால் பண்ணையில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று திண்டுக்கல்லில் இருந்து ஊத்தங்கரைக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது, பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கோம்பூர் அருகே வந்தபோது எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த வெங்கடேசன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×