என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா பரிசோதனை செய்வதாக கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை- போலி அதிகாரி கைது
Byமாலை மலர்14 Oct 2020 6:52 AM GMT (Updated: 14 Oct 2020 6:52 AM GMT)
கொரோனா பரிசோதனை செய்வதாக கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலி சுகாதார ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.
குளச்சல்:
குமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்தவர் அபிலாஷ் பெர்லின் (வயது 39). மார்த்தாண்டத்தில் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் சம்பவத்தன்று ஒரு வீட்டிற்கு சென்று ‘தான் சுகாதார துறை ஆய்வாளர் என்றும், குழந்தைகளுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்ய வேண்டும்‘ என அறிமுகம் செய்து விட்டு, வீட்டில் இருந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் குளச்சல் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி விசாரணை நடத்தி அபிலாஷ் பெர்லின் மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்தார். இதனையறிந்த அபிலாஷ் பெர்லின் தலைமறைவனார். இதையடுத்து சப் - இன்ஸ்பெக்டர் ஜாண்போஸ்கோ தலைமையிலான தனிப்படையினர் நேற்று கொல்லங்கோட்டில் வைத்து அபிலாஷ் பெர்லினை கைது செய்தனர். பின்னர் அவர் நாகர்கோவில் மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
போலி சுகாதார ஆய்வாளர் அபிலாஷ் பெர்லினுக்கு கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்தது. இவரது மனைவி திருமணமான 3 மாதத்தில் பிரிந்து சென்று விட்டார். அதன்பின்பு அபிலாஷ் பெர்லின் தனியாக வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
குமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்தவர் அபிலாஷ் பெர்லின் (வயது 39). மார்த்தாண்டத்தில் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் சம்பவத்தன்று ஒரு வீட்டிற்கு சென்று ‘தான் சுகாதார துறை ஆய்வாளர் என்றும், குழந்தைகளுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்ய வேண்டும்‘ என அறிமுகம் செய்து விட்டு, வீட்டில் இருந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் குளச்சல் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி விசாரணை நடத்தி அபிலாஷ் பெர்லின் மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்தார். இதனையறிந்த அபிலாஷ் பெர்லின் தலைமறைவனார். இதையடுத்து சப் - இன்ஸ்பெக்டர் ஜாண்போஸ்கோ தலைமையிலான தனிப்படையினர் நேற்று கொல்லங்கோட்டில் வைத்து அபிலாஷ் பெர்லினை கைது செய்தனர். பின்னர் அவர் நாகர்கோவில் மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
போலி சுகாதார ஆய்வாளர் அபிலாஷ் பெர்லினுக்கு கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்தது. இவரது மனைவி திருமணமான 3 மாதத்தில் பிரிந்து சென்று விட்டார். அதன்பின்பு அபிலாஷ் பெர்லின் தனியாக வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X