என் மலர்
செய்திகள்

மரணம்
குடியாத்தம் அருகே பாம்பு கடித்து பெண் பலி
குடியாத்தம் அருகே பாம்பு கடித்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம்:
குடியாத்தத்தை அடுத்த அக்ராவரம் பூங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பரத். இவரது மனைவி நிர்மலா (வயது 28). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நேற்று முன்தினம் நிர்மலா அதே பகுதியில் உள்ள நிலத்தில் வேர்க்கடலை பறித்துக்கொண்டிருந்தார். அப்போது அவரை பாம்பு கடித்துள்ளது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்கரவர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






