என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
கடைகளில் புகையிலை பொருட்கள் பறிமுதல் - பெண் உள்பட 2 பேர் கைது
உடையார்பாளையம் அருகே கடைகளில் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் பெண் உள்பட 2 பேரை கைது செய்தனர்.
உடையார்பாளையம்:
உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி மற்றும் போலீசார் உடையார்பாளையம் கடைவீதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது உடையார்பாளையம் திருச்சி ரோட்டு தெருவைச் சேர்ந்த தனஷ்கோடி(வயது 40), அதே பகுதியை சேர்ந்த சசிகலா (41) ஆகியோர், அவர்களது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து 2 பேரையும் கைது செய்து, கடைகளில் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
Next Story