search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சீபுரம் கலெக்டர்
    X
    காஞ்சீபுரம் கலெக்டர்

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் கோ-ஆப்டெக்ஸ் சிறப்பு விற்பனை: கலெக்டர் தொடங்கி வைத்தார்

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் கோ-ஆப்டெக்ஸ் சிறப்பு விற்பனையை கலெக்டர் பொன்னையா தொடங்கி வைத்தார்.
    காஞ்சீபுரம்: 

    காஞ்சீபுரம் காந்தி ரோட்டில் அமைந்துள்ள காமாட்சி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி 2020 சிறப்பு விற்பனையை மாவட்ட கலெக்டர் பொன்னையா தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    கோ-ஆப்டெக்ஸ் என்று அனைவராலும் அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கம் 1935-ம் ஆண்டில் தொடங்கப்பட்டு தொடார்ந்து 85 ஆண்டுகளாக வாடிக்கையாளர்்களுக்கு சேவை புரிந்து வருகிறது. மேலும் வாடிக்கையாளார்களின் மாறிவரும் ரசனை மற்றும் அவார்களின் தேவைகளை அறிந்து கைத்தறி ரகங்களை உருவாக்க நிறுவனம் புத்தம் புதிய வடிவமைப்புகளில் உற்பத்தி செய்து 2019-2020-ம் ஆண்டில் ரூ.300 கோடி அளவுக்கு சில்லரை விற்பனை செய்யப்பட்டு அதன் மூலம் கைத்தறி நெசவாளார்களுக்கு தொடர்்ந்து வேலைவாய்ப்பும் அளித்து வருகிறது. கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.9.47 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது தீபாவளி 2020 பண்டிகை விற்பனை இலக்காக ரூ.11 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. காஞ்சீபுரம் காமாட்சி கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையம் கடந்த ஆண்டு ரூ.1.14 கோடி விற்பனை செய்துள்ளது. இந்த ரூ.1.30 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய பெருநாட்டின் மிக முக்கிய பண்டிகையான தீபாவளி 2020 சிறப்பு விற்பனை அனைத்து விற்பனை நிலையங்களிலும் 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடியுடன் கோலகலமாக தொடங்குகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் வேலூர் கோ-ஆப் டெக்ஸ் முதுநிலை மண்டல மேலாளார் சண்முகம், காஞ்சீபுரம் கோ-ஆப் டெக்ஸ் மேலாளர்் (வடிவமைப்பு மற்றும் உற்பத்தி) காங்கேய வேலு, காமாட்சி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை மேலாளர் தணிகைவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×