search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திருப்பூரில் புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

    திருப்பூரில் புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நல்லூர்:

    திருப்பூர் ஊரக போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று முன்தினம் ஊரக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காங்கேயம் ரோடு, ராக்கியாபாளையம் பிரிவில் உள்ள ஒரு துணிக்கடை அருகே பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது.

    அங்கு சென்ற போலீசார் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஜீவன்குமார் என்பவரிடம் விசாரணை நடத்தி கடையை சோதனை செய்தனர். அப்போது கடையில் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஜீவன்குமாரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 300 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×