என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கயத்தாறு அருகே வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்11 Oct 2020 12:14 PM GMT (Updated: 11 Oct 2020 12:14 PM GMT)
கயத்தாறு அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கயத்தாறு:
கயத்தாறு அருகே அய்யனார் ஊத்து அம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் பூல்பாண்டி (வயது 30). இவருடைய மனைவி பிரேமா (27). இவர்களுக்கு முகிலா (4), புவனேஸ்வரி (3) என்ற பெண் குழந்தைகளும், 1 வயதில் கோபி என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். பூல்பாண்டி கேரளா மற்றும் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று கருப்புக்கட்டி வியாபாரம் செய்து வந்தார். தற்போது ஊரடங்கால் சரியாக வியாபாரத்துக்கு செல்லவில்லை. இதனால் மன உளைச்சலில் வீட்டிலேயே இருந்தார்.
இதில் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் பூல்பாண்டி அடிக்கடி மது குடித்ததாகவும், இதனை பிரேமா கண்டித்ததாகவும் தெரிகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த பூல்பாண்டி மதுபோதையில் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கயத்தாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அரிக்கண்ணன் சம்பவ இடத்துக்கு வந்தார். பூல்பாண்டியின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X