என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராமநாதபுரம் காவல்துறை பயிற்சி முகாமில் தூய்மை பணி செய்த பெண் திடீர் தற்கொலை
Byமாலை மலர்10 Oct 2020 10:48 AM GMT (Updated: 10 Oct 2020 10:48 AM GMT)
ராமநாதபுரம் காவல்துறை பயிற்சி முகாமில் தூய்மை பணி செய்த பெண் திடீரென தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் முல்லை நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர். அவருடைய மனைவி லோகேஸ்வரி (வயது 35). ராமநாதபுரம் காவல்துறை பயிற்சி முகாம் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். கணவர் ராஜசேகர் இறந்து விட்ட நிலையில் ஒரு மகன், மகளுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலையில் மகன், மகள் வெளியே சென்றிருந்த நேரத்தில் லோகேஸ்வரி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்த ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். லோகேஸ்வரியின் உடலை பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. தற்கொலை செய்து கொண்ட லோகேஸ்வரி சமீபத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளாகி, சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X