search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    ஊனமாஞ்சேரியில் கல் அரைக்கும் எந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலி

    ஊனமாஞ்சேரியில் கல் அரைக்கும் எந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வண்டலூர்:

    புதுச்சேரி திருக்கானூர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 60). கூலித்தொழிலாளி. இவர் வண்டலூர் அருகே உள்ள ஊனமாஞ்சேரியில் தங்கி அதே பகுதியில் உள்ள கல் உடைக்கும் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆறுமுகம் வேலை செய்து கொண்டிருக்தபோது எதிர்பாராத விதமாக திடீரென கல் அரைக்கும் எந்திரத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்தார். இதை பார்த்த சக தொழிலாளிகள் உடனடியாக ஆறுமுகத்தை மீட்டு ரத்தினமங்கலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழிற்சாலை மேலாளரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×