என் மலர்
செய்திகள்

ஆர்ப்பாட்டம்
தாராபுரத்தில் சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தாராபுரத்தில் சாலை பணியாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தாராபுரம்:
கருவூல கணக்குத் துறை பணிகளை தனியாருக்கு கொடுத்துள்ள உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தியும், அரசு ஆணை எதுவும் வெளியிடாமலேயே அரசுத் துறையைதனியார் மயமாக்கும் தமிழக அரசின் செயலை கண்டித்தும், தாராபுரத்தில் சாலை பணியாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட கிளை நிர்வாகி ரீட்டா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story