என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    சிப்காட் அருகே கஞ்சா விற்ற பெண் கைது

    சிப்காட் அருகே கஞ்சா விற்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அன்னவாசல்:

    சிப்காட் அருகே உள்ள ரெங்கம்மாள் சத்திரம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக வெள்ளனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து திருக்கோகர்ணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுரி, சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் உள்ளிட்ட போலீசார் ரெங்கம்மாள் சத்திரம் காமராஜர் நகர் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த முருகன் மனைவி மல்லிகா (வயது 40) என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து மல்லிகாவை போலீசார் கைது செய்து, திருச்சி பெண்கள் சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து 1¼ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×