என் மலர்
செய்திகள்

வீடு புகுந்து கொள்ளை
தொழிலாளி வீட்டு பீரோவில் இருந்த 6 பவுன் நகை திருட்டு
அரிமளம் அருகே தொழிலாளி வீட்டு பீரோவில் இருந்த 6 பவுன் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரிமளம்:
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் பேரூராட்சி மீனாட்சிபுரம் வீதியில் வசித்து வருபவர் முத்தையா. தொழிலாளி. இவரது மனைவி விஜயா (வயது 26). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டை பூட்டி விட்டு சாவியை நிலை கதவு மேல்புறத்தில் வைத்துவிட்டு அரிமளம் மயிலாடும்பாறை பகுதியில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்று விட்டு திரும்பி வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கிருந்த பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த தங்க நெக்லஸ், கம்மல் தோடு உள்ளிட்ட சுமார் 6 பவுன் தங்க நகையை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து முத்தையா அரிமளம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
Next Story