என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
புதுவையில் திட்டமிட்டபடி நாளை பள்ளிகள் திறப்பு
புதுச்சேரி:
மத்திய அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் புதுவையில் நாளை (வியாழக்கிழமை) முதல் மாணவர்கள் பள்ளிக்கு வந்து ஆசிரியர்களிடம் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் விதமாக பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
10, 12-ம் வகுப்புகள் நாளை முதலும், 9,11-ம் வகுப்புகள் வரும் 12-ந் தேதி முதல் செயல்படும் என பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகளை தற்போது திறக்கப்போவதில்லை என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். கொரோனா தொற்று அதிகரித்து வரும் நேரத்தில் புதுவையிலும் பள்ளிகளை திறக்கக்கூடாது என பல்வேறு அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.
இதனால் புதுவையில் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகுமா? இல்லையா? என்ற குழப்பம் பெற்றோர்களிடையே எழுந்தது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுவிடம் கேட்டபோது, பள்ளிகள் திறப்பது தொடர்பான முடிவில் எந்த மாற்றமும் இல்லை. பள்ளிகளை திறப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தற்போது நடந்து வருகிறது என தெரிவித்தார். இதனால் திட்டமிட்டபடி நாளை புதுவையில் பள்ளிகள் திறக்கப்படுவது உறுதியாகியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்