என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பண்டிகை காலத்தில் இலவச துணிகளுக்கு பதிலாக பயனாளிகள் வங்கி கணக்கில் பணம்- கவர்னர்
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் ஆதிதிராவிட மக்கள், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு சார்பில் பண்டிகை காலங்களில் இலவச துணிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது பண்டிகை காலம் வர உள்ளதால் அவர்களுக்கு இலவச துணிகள் வழங்குவது தொடர்பாக புதுவை அரசு சார்பில் கோப்பு தயாரிக்கப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் அதை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார்.
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் இது தொடர்பாக தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
புதுவை மாநிலத்தில் விழா காலங்களில் மக்களுக்கு இலவச துணி வழங்குவது தொடர்பாக கவர்னர் கிரண்பேடி கடந்த 9.6.2020 அன்று கடிதம் அனுப்பி இருந்தார்.
வெளிப்படை தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக தான் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்பட்டு வருகிறது.
இதேபோல் கடந்த ஆண்டுகளை போல் பணம் இந்த ஆண்டும் வழங்குவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இதை கவர்னர் கிரண்பேடி சமூகவலை தளத்தில் பதிவு செய்து உள்ளார். இதுகுறித்துகிரண்பேடி கூறுகையில், ‘வங்கி கணக்கில் பணம் தரப்படும் முறையை மீண்டும் மத்திய அரசு உறுதிபடுத்தி உள்ளது. இது அரசு விதி’ என்று குறிப்பிட்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்