என் மலர்
செய்திகள்

மின்சாரம் தாக்கி பலி
மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி
மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேளாங்கண்ணி:
வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரம் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 60). எலக்ட்ரீசியனான இவர், கீழையூர் அருகே திருவாய்மூர் பகுதியில் உள்ள மாசிலாமணி என்பவரது வீட்டில் விசேஷ நிகழ்ச்சிக்கு மின்விளக்கு அமைத்து இருந்தார். பின்னர் விஷேசம் முடிந்தவுடன் மின் விளக்குகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திருக்குவளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






