என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஈரோடு அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

    ஈரோடு அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு பாண்டியன் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 26). இவருடைய மனைவி மல்லிகா. இவர்களுக்கு திவின் (1) என்ற மகன் உள்ளான். மல்லிகா தனது மகனுடன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் பிரபாகரன் அவருடைய தாய் வாசுகியுடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வாசுகி தறி பட்டறைக்கு வேலைக்கு சென்று விட்டார். அதனால் பிரபாகரன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். பிரபாகரனுக்கு அடிக்கடி வயிற்று வலி இருந்து வந்ததால் மனம் உடைந்து இரவில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்ததும் வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிரபாகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×