search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    குருபரப்பள்ளி அருகே விவசாயி தற்கொலை

    குருபரப்பள்ளி அருகே விவசாயி தற்கொலை செய்து செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குருபரப்பள்ளி அருகே உள்ள எண்ணேகொல்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 38). விவசாயி. மது குடிக்கும் பழக்கம் உள்ள இவர், எந்த வேலைக்கும் செல்லாமல் மது குடித்து வந்தார். இதற்கு இவரது மனைவி எதிர்ப்பு தெரிவித்ததுடன், மது குடிக்கும் பழக்கத்தை கைவிட வலியுறுத்தியுள்ளார். இதனால் மனமுடைந்த அண்ணாதுரை சம்பவத்தன்று விஷம் குடித்து விட்டு தோட்டத்தில் மயங்கி கிடந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர கிசிச்சை அளித்தும் பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×