search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுச்சேரி
    X
    புதுச்சேரி

    தமிழகத்தை போல் புதுவையிலும் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்படுமா? பெற்றோர்கள் எதிர்பார்ப்பு

    தமிழகத்தை போல் புதுவையிலும் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    புதுச்சேரி:

    தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் நாளை (1-ந் தேதி) முதல் பள்ளிகளுக்கு சென்று சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியிட்டு இருந்தது.

    அதன்படி புதுவையிலும் வருகிற 5-ந் தேதி 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும், 12-ந் தேதியன்று 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் வகுப்புகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் தமிழக பள்ளிக்கல்வித் துறையின் அரசாணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பெற்றோர்களின் கருத்துக்களை கேட்டறிந்த பின், மருத்துவக் குழுவுடன் ஆலோசித்து பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும் என தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

    புதுவையை பொறுத்த வரை கல்வி தொடர்பான அனைத்து வி‌ஷயங்களிலும் தமிழகத்தையே பின்பற்றுகிறது. எனவே, பள்ளிகள் திறக்கும் தேதி புதுவையிலும் மாற்றப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமியிடம் கேட்டபோது, தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது தொடர்பான அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    புதுவை மாநிலத்தில் பள்ளிகளை திறப்பதா? தள்ளி வைப்பதா? என்பது குறித்து கல்வித்துறை அமைச்சர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளோம். அதன்பிறகு பள்ளிகள் திறப்பு குறித்து இறுதி முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.

    Next Story
    ×