search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    குடும்பம் நடத்த மனைவி வராததால் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

    நாகூர் அருகே குடும்ப பிரச்சினையில் மனைவி தாய் வீட்டுக்கு சென்று வர மறுத்ததால் மனமுடைந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    நாகூர்:

    நாகூர் அருகே உள்ள வடகுடி தோப்பு தெருவை சேர்ந்த ராமதாஸ் மகன் கண்ணன் (வயது33). தொழிலாளி. இவருக்கு வைஷ்ணவி (28) என்ற மனைவியும், தர்சன் என்ற மகனும் உள்ளனர். கண்ணன்-வைஷ்ணவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வைஷ்ணவி கணவரிடம் கோபித்துக்கொண்டு மயிலாடுதுறையில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். 

    இதையடுத்து கண்ணன் அங்கு சென்று குடும்பம் நடத்த வருமாறு வைஷ்ணவியை அழைத்தார். அதற்கு அவர் மறுத்து விட்டார். இதன் காரணமாக மனவேதனை அடைந்த கண்ணன் சம்பவத்தன்று வடகுடியில் உள்ள தனது வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை உடனடியாக நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். 

    இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×