search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    சிங்கம்புணரி அருகே வாகனம் மோதி ஆசிரியர் பலி

    சிங்கம்புணரி அருகே நடந்து சென்ற ஆசிரியர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
    சிங்கம்புணரி:

    சிங்கம்புணரி அருகே எஸ்.வி. மங்களம் இமானுவேல் தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது48). இவர் தனியார் பள்ளி ஆசிரியராக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றி ஓய்வுபெற்றார். இவர் திண்டுக்கல் -திருப்பத்தூர் சாலை ஓரத்தில் நடந்து சென்றபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

    இதுகுறித்த புகாரின்பேரில் எஸ்.வி. மங்களம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×