என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குருபரப்பள்ளி அருகே தனியார் நிறுவன மேலாளர் கார் மோதி பலி
Byமாலை மலர்28 Sep 2020 9:18 AM GMT (Updated: 28 Sep 2020 9:18 AM GMT)
குருபரப்பள்ளி அருகே விபத்தில் தனியார் நிறுவன மேலாளர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குருபரப்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த சின்னபாளேத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர்(வயது30). இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவர் தனது மோட்டார்சைக்கிளில் இரவு ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்து கொண்டிருந்தார். குருபரப்பள்ளி அருகே உள்ள போலுப்பள்ளி என்ற இடத்தில் வந்த போது நிலை தடுமாறி, சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியனில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் ஸ்ரீதர் சாலையில் விழுந்தார்.
அப்போது அந்த வழியே பின்னால் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து, ஸ்ரீதர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ஸ்ரீதர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X