என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிளஸ்-2 மாணவி கடத்தல் - போக்சோ சட்டத்தில் 2 பேர் கைது
Byமாலை மலர்28 Sep 2020 6:52 AM GMT (Updated: 28 Sep 2020 6:52 AM GMT)
பரங்கிப்பேட்டையில் பிளஸ்-2 மாணவி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக போக்சோ சட்டத்தில் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புவனகிரி:
பரங்கிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் 16 வயதுடைய பிளஸ்-2 மாணவி. கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த இவர் திடீரென மாயமானார். இதையடுத்து அவரை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடினர். இருப்பினும் கிடைக்கவில்லை. விசாரித்ததில் அவரை 2 பேர் கடத்தி சென்றது தெரிந்தது. இது குறித்து மாணவியின் தந்தை பரங்கிப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் பரங்கிப்பேட்டை அருகே கரிக்குப்பத்தை சேர்ந்த அருள்பாலன் (25) மற்றும் சிவகுரு (20) ஆகியோர் மாணவியை கடத்தி சென்றது தெரிந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருள்பாலன், சிவகுரு ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களிடம் இருந்து மாணவியையும் மீட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X