search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருமணம் செய்து வைக்கக்கோரி காதலன் வீட்டு முன்பு குழந்தையுடன் பெண் என்ஜினீயர் தர்ணா

    கடலூரில் திருமணம் செய்து வைக்கக்கோரி காதலன் வீட்டு முன்பு குழந்தையுடன் பெண் என்ஜினீயர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் கூத்தப்பாக்கத்தை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 24). என்ஜினீயரான இவரும், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டையை சேர்ந்த மோனிஷா (23) என்ற பெண் என்ஜினீயரும் கடந்த 2017-ம் ஆண்டு என்.எல்.சி.யில் பயிற்சியில் ஈடுபட்டனர்.

    அப்போது அருண்குமாருக்கும், மோனிஷாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்த நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி மோனிஷாவுடன் வலுக்கட்டாயமாக அருண்குமார் உல்லாசத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதில் அவர் கர்ப்பமானார். ஆனால் அதன் பிறகு திருமணம் செய்யவில்லை. இதற்கிடையில் மோனிஷாவுக்கு ஆண் குழந்தையும் பிறந்தது. அந்த குழந்தையை அருண்குமார் மதுரையை சேர்ந்த சத்யா என்ற பெண்ணிடம் கொடுத்து வளர்க்க சொன்னதாக தெரிகிறது.

    தற்போது அந்த குழந்தைக்கு 3 வயது ஆகிறது. இதற்கிடையில் அந்த பெண் என்ஜினீயர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அருண்குமாரிடம் வற்புறுத்தி வந்தார். அதற்கு அவர் மறுத்து, வெளிநாட்டுக்கு சென்று விட்டார்.

    இது பற்றி மோனிஷா கடந்த 8-ந் தேதி கடலூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் அருண்குமார், சத்யா ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில், அருண்குமாருடன் திருமணம் செய்து வைக்கக்கோரி கூத்தப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டு முன்பு தனது 3 வயது குழந்தையுடன் மோனிஷா தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். இது பற்றி அறிந்ததும் அருண்குமாரின் பெற்றோர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டனர்.

    இருப்பினும் மோனிஷா தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×