என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரதமரின் நிதி உதவி திட்டம்: கிருஷ்ணகிரியில் முறைகேட்டில் ஈடுபட்ட 5 பேர் கைது
Byமாலை மலர்24 Sep 2020 2:26 PM GMT (Updated: 24 Sep 2020 2:26 PM GMT)
கிருஷ்ணகிரியில் பிரதமரின் நிதி உதவி திட்டம் மூலமாக முறைகேட்டில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
பிரதமரின் கிஷான் நிதியுதவி திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட தகுதியற்ற பயனாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட வங்கிகள் மூலமாக தொகையை மீட்டெடுத்து வழிகாட்டு நெறிமுறைகளின்படி அந்த தொகை அரசு கணக்கில் சேர்க்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 8 ஆயிரத்து 97 தகுதியற்ற பயனாளிகளில் நேற்று வரையில் 4 ஆயிரத்து 972 பயனாளகளிடம் இருந்து ரூ.1 கோடியே 87 லட்சத்து 45 ஆயிரம் பிடித்தம் செய்யப்பட்டு அரசு கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.
மீதம் உள்ள 3,125 பயனாகளிடம் இருந்து உரிய தொகையை வருவாய், வேளாண்மை, தோட்டக்கலை துறை அலுவலர்கள் மூலமாக வசூலித்து அரசு கணக்கில் செலுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பிரதமரின் கிஷான் திட்டத்தில் தகுதியற்ற பயனாளிகள் மற்றும் அவர்களை தவறுதலாக சேர்த்த கணினி மையங்களின் உரிமையாளர்கள், சம்பந்தபட்ட அனைத்து நபர்களையும் கண்டுபிடித்து அவர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை எடுக்கும்படி சி.பி.சி.ஐ.டி.யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.இதன் தொடர்ச்சியாக முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்யப்பட்டு இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக 51 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X