search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சேது எக்ஸ்பிரஸ் ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும் - பயணிகள் கோரிக்கை

    கொரோனா பரவலை தடுப்பதற்காக நிறுத்தப்பட்ட சேது எக்ஸ்பிரஸ் ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சிவகங்கை:

    சிவகங்கையில் இருந்து சென்னைக்கு தினசரி நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சென்று வருகின்றனர். கொரோனா ஊரடங்குக்கு முன்பாக சிவகங்கையில் இருந்து சென்னை செல்ல ராமேசுவரம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் சேது எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகிய தினசரி ரெயில்களும் சென்று வந்தன.

    இதுதவிர வாரத்திற்கு 3 நாட்கள் செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு சிலம்பு எக்ஸ்பிரஸ் புறப்பட்டு சென்றது. மேலும் தினசரி விருதுநகரில் இருந்து திருச்சி வரை டெமு ரெயில் ஒன்றும், ராமேசுவரம் திருச்சி பயணிகள் ரெயில் ஒன்றும் சென்று வந்தன.

    மேலும் வாராந்திர ரெயில்களாக வாரணாசி-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில், மாண்டுவாடி-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ், பாண்டிச்சேரியில் இருந்து கன்னியாகுமரிக்கு ரெயில் ஆகியவை இயக்கப்பட்டது. இத்தனை ரெயிலில் சென்ற போதும் போதுமான இட வசதியின்றி சிவகங்கை மக்கள் அவதிப்பட்டு வந்தார்கள். இந்தநிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் மாத கடைசியில் இருந்து ரெயில்கள் நிறுத்தப்பட்டன. கடந்த 6 மாதமாக ரெயில் இயக்கப்படாததால் இந்த பகுதி மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.

    தற்போது சென்னையில் இருந்து செங்கோட்டை செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் மட்டும் இயக்கப்படுகிறது. மற்ற ரெயில்கள் இயக்கப்படவில்லை. பாண்டிச்சேரி-கன்னியாகுமரி ரெயில், வாரணாசி-ராமேசுவரம் ரெயில், மாண்டுவாடி-ராமேசுவரம் ரெயில் ஆகியவை வெளிமாநிலங்களில் இணைக்கும் வகையில் இயக்கப்படும் ரெயில்கள். ஆனால் சென்னை-ராமேசுவரம் ரெயில் மற்றும் விருதுநகர்-திருச்சி ரெயில் ஆகியவை தமிழகத்தில் மட்டும் இயக்கப்படுகிறது.

    எனவே பொதுமக்கள், அரசு ஊழியர்கள் வசதிக்காகவும் சென்னை-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் மற்றும் சேது எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களையும், அதுபோல விருதுநகரில் இருந்து திருச்சி வரை செல்லும் பயணிகள் ரெயிலையும், திருச்சி-ராமேஸ்வரம் பயணிகள் ரெயிலையும் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×