search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி கட்டிட மேஸ்திரி பலி

    மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி கட்டிட மேஸ்திரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காவேரிப்பாக்கம்:

    திருவலத்தை அடுத்த குப்பத்தாமோட்டூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 35), கட்டிட மேஸ்திரி. இவர், நேற்று முன்தினம் பாணாவரத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு வந்தார். பின்னர் மோட்டார் சைக்கிளில் இரவு வீடு திரும்பினார்.

    அய்யம்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த புளியமரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×