search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கீழ்வேளூர் அருகே சாராயம் விற்ற 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது

    கீழ்வேளூர் அருகே சாராயம் விற்ற 2 பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிக்கல்:

    கீழ்வேளூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கீழ்வேளூர் அருகே காக்கழனி தேரடி தெருவில் சாராயம் விற்ற சாவித்திரி (வயது55), ராதாமங்கலம் காலனி தெருவில் சாராயம் விற்ற சாரதாம்பாள் (63), ராதாமங்கலம் எறும்புகன்னி பகுதியில் சாராயம் விற்ற முருகையன் (47), நீலப்பாடி கடைத்தெருவில் சாராயம் விற்ற பிரபாகரன் (27), சதீஷ் (29) ஆகிய 5 பேரை கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் 5 பேரிடம் இருந்தும் தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×