என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காரைக்குடி அருகே வழிப்பறி வழக்கில் மேலும் ஒருவர் கைது
Byமாலை மலர்19 Sep 2020 1:54 PM GMT (Updated: 19 Sep 2020 1:54 PM GMT)
காரைக்குடி அருகே வழிப்பறி வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்குடி:
காரைக்குடி புதுசந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(வயது 54). ரியல் எஸ்டேட் புரோக்கர். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு இவரை நிலம் வாங்குவது குறித்து பேச வேண்டும் என்று கூறி கருவியபட்டிக்கு வருமாறு சிலர் அழைத்தனர். அதனையொட்டி சுப்பிரமணியம் தனது மோட்டார் சைக்கிளில் கருவியபட்டிக்கு சென்றார். அங்கு அவரை சூழ்ந்துகொண்ட 7 பேர் கொண்ட கும்பல் 7 பவுன் நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிளை மிரட்டி பறித்துக்கொண்டு தப்பிவிட்டது. இதுகுறித்து சுப்பிரமணியன் பள்ளத்தூர் போலீசில் புகார் செய்தார்.
இதில் 6 பேரை போலீசார் கைது செய்தனர் 6 பவுன் நகைகளையும் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த சத்யாநகரை சேர்ந்த ரவி(20) என்பவரை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் அவரை நேற்று போலீசார் கைது செய்து அவரிடமிருந்து மோட்டார் சைக்கிளையும், நகைகளையும் கைப்பற்றினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X