search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்ப்பாட்டம்
    X
    ஆர்ப்பாட்டம்

    காரைக்காலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று காரைக்கால் பழைய ரெயிலடி அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    காரைக்கால்:

    மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று காரைக்கால் பழைய ரெயிலடி அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் மதியழகன் தலைமை தாங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை, விலைவாசி உயர்வு, பொருளாதார வீழ்ச்சி, வறுமை அதிகரிப்பு போன்றவற்றை மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் சீர்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
    Next Story
    ×