என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுச்சேரியில் தொற்று அதிகம் பாதித்த 11 இடங்களில் ஊரடங்கு அமல்
Byமாலை மலர்15 Sep 2020 10:05 AM GMT (Updated: 15 Sep 2020 10:05 AM GMT)
புதுச்சேரியில் தொற்று அதிகம் பாதித்த மேலும் 11 இடங்களில் ஊரடங்கு அமல்படுத்த கலெக்டர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவையில் கொரோனா வைரஸ் தொற்று அதிக பாதிப்பு உள்ள 11 தெருக்களில் ஏற்கனவே ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்தநிலையில் மேலும் 11 இடங்கள் புதிதாக கண்டறியப்பட்டு உள்ளன. அந்த இடங்களில் ஊரடங்கு அமல்படுத்த கலெக்டர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி ரெட்டியார்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய பகுதியான காராமணிக்குப்பம் பாவேந்தர் வீதி, பவளநகரில் முத்துமாரியம்மன்கோவில் வீதி, உழவர்கரை நண்பர்கள் நகர், காட்டேரிக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட காட்டேரிக்குப்பம் மேட்டுத்தெரு, பாகூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருளன்சந்தை வ.உ.சி. நகர், மேட்டுப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் திலாசுப்பேட்டை தேரோடும் வீதி, அபிஷேகப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அபிஷேகப்பாக்கம் அம்பேத்கர் வீதி, மடுகரை மெயின்ரோடு, மாரியம்மன் கோவில் வீதி, கொசப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதுசாரம் ராஜீவ்காந்தி நகர் 2-வது குறுக்கு தெரு, லாஸ்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அசோக் நகர் பாரதிதாசன் வீதி ஆகிய பகுதிகளில் நேற்று முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த தெருக்கள் தடுப்புகளால் மூடப்பட்டன. இந்த ஊரடங்கு வருகிற 20-ந் தேதி வரை அமலில் இருக்கும்.
காட்டேரிக்குப்பம் சமுதாய நல வழி மைய டாக்டர் சுப்பிரமணி தலைமையில் சுகாதாரத்துறை, காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் காட்டேரிக் குப்பம் மேட்டுத்தெருக்கு நேற்று ‘சீல்’ வைக்கப்பட்டது.
புதுவையில் கொரோனா வைரஸ் தொற்று அதிக பாதிப்பு உள்ள 11 தெருக்களில் ஏற்கனவே ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்தநிலையில் மேலும் 11 இடங்கள் புதிதாக கண்டறியப்பட்டு உள்ளன. அந்த இடங்களில் ஊரடங்கு அமல்படுத்த கலெக்டர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி ரெட்டியார்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய பகுதியான காராமணிக்குப்பம் பாவேந்தர் வீதி, பவளநகரில் முத்துமாரியம்மன்கோவில் வீதி, உழவர்கரை நண்பர்கள் நகர், காட்டேரிக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட காட்டேரிக்குப்பம் மேட்டுத்தெரு, பாகூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருளன்சந்தை வ.உ.சி. நகர், மேட்டுப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் திலாசுப்பேட்டை தேரோடும் வீதி, அபிஷேகப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அபிஷேகப்பாக்கம் அம்பேத்கர் வீதி, மடுகரை மெயின்ரோடு, மாரியம்மன் கோவில் வீதி, கொசப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதுசாரம் ராஜீவ்காந்தி நகர் 2-வது குறுக்கு தெரு, லாஸ்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அசோக் நகர் பாரதிதாசன் வீதி ஆகிய பகுதிகளில் நேற்று முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த தெருக்கள் தடுப்புகளால் மூடப்பட்டன. இந்த ஊரடங்கு வருகிற 20-ந் தேதி வரை அமலில் இருக்கும்.
காட்டேரிக்குப்பம் சமுதாய நல வழி மைய டாக்டர் சுப்பிரமணி தலைமையில் சுகாதாரத்துறை, காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் காட்டேரிக் குப்பம் மேட்டுத்தெருக்கு நேற்று ‘சீல்’ வைக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X