என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராட்டம்
    X
    போராட்டம்

    சங்கு ஊதி மணியடித்து பாசிக்-பாப்ஸ்கோ தொழிலாளர்கள் போராட்டம்

    5-வது நாளாக பாசிக்-பாப்ஸ்கோ தொழிலாளர்கள் போராட்டம் தொடர்ந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் சங்கு ஊதி, மணியடித்து நூதனமாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும். பாசிக்- பாப்ஸ்கோ நிறுவனங்களை தொடர்ந்து இயக்க வேண்டும் என வலியுறுத்தி பாசிக், பாப்ஸ்கோ ஏ.ஐ.டி.யூ.சி. தொழிலாளர்கள் சங்கத்தினர் கடந்த 10-ந் தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

    இன்று 5-வது நாளாக போராட்டம் தொடர்ந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் சங்கு ஊதி, மணியடித்து நூதனமாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம், செயல் தலைவர் அபிஷேகம், பாசிக், பாப்ஸ்கோ சங்க பொறுப்பாளர்கள் தரணிராஜன், முருகவேல், அப்துல்லாகான், ஜெய்சங்கர், அமுதா, தமிழ்ஒளி, அன்பழகன், இரிசப்பன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    Next Story
    ×