என் மலர்
செய்திகள்

கைது
திருமண ஆசை காட்டி செவிலியரை ஏமாற்றிய காதலன் கைது
திருச்சி தென்னூரில் திருமண ஆசை காட்டி செவிலியரை ஏமாற்றிய காதலன் கைது செய்யப்பட்டார்.
ஸ்ரீரங்கம்:
திருச்சி தென்னூர் அண்ணாநகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருபவர் தமிழா (வயது 26). இவருடன் அதே மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வந்தவர் தங்கபாண்டியன் (25) . இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். இதில் தமிழாவிடம் திருமண ஆசை காட்டி தங்கபாண்டியன் நெருக்கமாக பழகி வந்தார். இதன் மூலம் அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.
அதன்பிறகு தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தமிழா பலமுறை தங்கபாண்டியனை வற்புறுத்தி வந்தார். ஆனால் அவர் திருமணத்துக்கு மறுத்ததோடு, தமிழாவுக்கு மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட அவர் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயா வழக்கு பதிவு செய்து, தங்க பாண்டியனை கைது செய்தார்.
Next Story