என் மலர்
செய்திகள்

சிகிச்சை குறித்து விளக்கும் டாக்டர்
புதுச்சேரியில் மேலும் 419 பேருக்கு கொரோனா பாதிப்ப
புதுச்சேரியில் மேலும் 419 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,439 ஆக அதிகரித்துள்ளது.
புதுச்சேரி:
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்படும் நிலையில், கடந்த சில வாரங்களாக பாதிப்பு எண்ணிக்கை மிக அதிக அளவில் உள்ளது. தினசரி நோய்த்தொற்று 90 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
இந்நிலையில், புதுச்சேரியில் மேலும் 419 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,026 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது 4831 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 14 ஆயிரத்து 238 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவுக்கு 5 பேர் பலியானதை அடுத்து அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 370 ஆக உயர்ந்துள்ளது.
Next Story






