என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வில்லியனூர் கொலை குற்றவாளிக்கு கொரோனா- விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார் அச்சம்
Byமாலை மலர்12 Sep 2020 9:49 AM GMT (Updated: 12 Sep 2020 9:49 AM GMT)
வில்லியனூர் கொலை குற்றவாளிக்கு கொரோனா விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார் அச்சம்
வில்லியனூர்:
வில்லியனூர் கணுவாய்ப்பேட்டை கப்பக்கார வீதியை சேர்ந்தவர் ராம்குமார் (வயது25) கடை ஊழியர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு இவரும் உத்திவாகினி பேட்டை சேர்ந்த இவரது நண்பர் முல்லைவளவன்(25) என்பவரும் ஒதியம்பட்டு- திருக்காஞ்சி சாலையில் மது குடித்தபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது ராம்குமாரின் தலையில் கல்லைப்போட்டு முல்லைவளவன் கொலை செய்தார்.
இதையடுத்து தலைமறைவாக இருந்த முல்லைவளவனை வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார், உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபிகாஷ், போலீஸ்காரர் அய்யனார் ஆகிய 3 பேரும் பிடிக்க முயன்றனர். அப்போது முல்லைவளவன் தப்பியோடினார். ஆனாலும் போலீசார் விரட்டி சென்று முல்லைவளவனை மடக்கி பிடித்து வில்லியனூர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரிடம் விசாரித்து விட்டு கொரோனா பரிசோதனைக்காக கதிர்காமம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அப்போது முல்லைவளவனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனால் முல்லை வளவனை பிடித்து சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார், உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபிகாஷ், போலீஸ்காரர் அய்யனார் ஆகிய 3 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது.
இதையடுத்து வில்லியனூர் போலீஸ் நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. ஏற்கனவே இந்த போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த 3 போலீசாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டபோது போலீஸ் நிலையத்தை மூடுமாறு டாக்டர் பரிந்துரை செய்து இருந்தார். ஆனால், இதனை ஏற்காமல் தொடர்ந்து போலீஸ் நிலையம் அங்கேயே செயல்பட்டு வந்தது.
தற்போது கொலை குற்றவாளிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவரை பிடித்து சென்ற போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸ்காரருக்கும் தொற்று பரவி இருக்கலாம் என கருதப்படுவதால் மற்ற போலீசாரிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
மேலும் போலீஸ் நிலையத்துக்கு புகார் தெரிவிக்க வரும் பொதுமக்களிடையேயும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
வில்லியனூர் கணுவாய்ப்பேட்டை கப்பக்கார வீதியை சேர்ந்தவர் ராம்குமார் (வயது25) கடை ஊழியர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு இவரும் உத்திவாகினி பேட்டை சேர்ந்த இவரது நண்பர் முல்லைவளவன்(25) என்பவரும் ஒதியம்பட்டு- திருக்காஞ்சி சாலையில் மது குடித்தபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது ராம்குமாரின் தலையில் கல்லைப்போட்டு முல்லைவளவன் கொலை செய்தார்.
இதையடுத்து தலைமறைவாக இருந்த முல்லைவளவனை வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார், உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபிகாஷ், போலீஸ்காரர் அய்யனார் ஆகிய 3 பேரும் பிடிக்க முயன்றனர். அப்போது முல்லைவளவன் தப்பியோடினார். ஆனாலும் போலீசார் விரட்டி சென்று முல்லைவளவனை மடக்கி பிடித்து வில்லியனூர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரிடம் விசாரித்து விட்டு கொரோனா பரிசோதனைக்காக கதிர்காமம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அப்போது முல்லைவளவனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனால் முல்லை வளவனை பிடித்து சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார், உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபிகாஷ், போலீஸ்காரர் அய்யனார் ஆகிய 3 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது.
இதையடுத்து வில்லியனூர் போலீஸ் நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. ஏற்கனவே இந்த போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த 3 போலீசாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டபோது போலீஸ் நிலையத்தை மூடுமாறு டாக்டர் பரிந்துரை செய்து இருந்தார். ஆனால், இதனை ஏற்காமல் தொடர்ந்து போலீஸ் நிலையம் அங்கேயே செயல்பட்டு வந்தது.
தற்போது கொலை குற்றவாளிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவரை பிடித்து சென்ற போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸ்காரருக்கும் தொற்று பரவி இருக்கலாம் என கருதப்படுவதால் மற்ற போலீசாரிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
மேலும் போலீஸ் நிலையத்துக்கு புகார் தெரிவிக்க வரும் பொதுமக்களிடையேயும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X