என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மொபட்டில் சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிப்பு- மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
Byமாலை மலர்11 Sep 2020 12:24 PM GMT (Updated: 11 Sep 2020 12:24 PM GMT)
புதுவையில் பெண்ணிடம் 3½ பவுன் தங்க செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுச்சேரி காந்திதிருநல்லூர் மருதம் நகர் பகுதியை சேர்ந்தவர் கவிதா (வயது 41). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவரது சகோதரர் அமைதி நகர் விரிவாக்கத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 8-ந் தேதி சகோதரர் வீட்டுக்கு சென்ற கவிதா, அன்று இரவு 8.30 மணியளவில் தனது மொபட்டில் வீட்டுக்கு புறப்பட்டார்.
தனபால்நகர் 3-வது குறுக்கு தெருவில் வந்தபோது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென கவிதாவின் கழுத்தில் கிடந்த 3½ பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சங்கிலி பறித்துச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X