search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    அரிவாள் வெட்டில் காயமடைந்த பெண் பலி - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலைமறியல்

    நன்னிலம் அருகே அரிவாள் வெட்டில் காயமடைந்த பெண் பலியான சம்பவத்தையடுத்து உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பத்தினியாபுரத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி நீலாவதி (வயது52). இவர்களுக்கு பிரவீன்குமார், மோகன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். சம்பவத்தன்று இவர்களுக்கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சிலர் நீலாவதியை அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயமடைந்த அவரை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதுகுறித்து நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வி்சாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவரது உறவினர்கள், இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நீலாவதியின் உடலை வாங்க மறுத்து சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த திருவாரூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதி அளித்தனர். இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அந்தபகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×