search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ராஜபாளையம் அருகே கஞ்சா வைத்திருந்த முதியவர் கைது

    ராஜபாளையம் அருகே கஞ்சா வைத்திருந்த முதியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே உள்ள அய்யனாபுரம் வில்வமரம் கோவில் தெரு பகுதியில் கீழராஜகுலராமன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டு இருந்த ஒரு நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ¼ கிலோ கஞ்சா வைத்திருந்ததும், அவர் அதே பகுதியை சேர்ந்த பன்னீர் (வயது 71) என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×